உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போலீசில் 69 பேருக்கு பதவி உயர்வு

போலீசில் 69 பேருக்கு பதவி உயர்வு

புதுச்சேரி : புதுச்சேரி, 10, 15, 25 ஆண்டுகள் பணி முடித்த போலீசாருக்கு, தலைமை காவலர், உதவி சப் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி போலீசில் 10, 15 மற்றும் 25 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு சிறப்பு நிலை தலைமை காவலர், உதவி சப் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் என மூன்று கட்ட பதவி உயர்வு கடந்த ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, போலீசில் 10 ஆண்டுகள் பணி முடித்த 9 போலீசாருக்கு சிறப்பு நிலை தலைமை காவலர் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. 15 ஆண்டுகள் பணி முடித்த தலைமை காவலர்கள் 8 பேருக்கு சிறப்பு நிலை உதவி சப் இன்ஸ்பெக்டர் பதவியும், 25 ஆண்டுகள் பணி முடித்த 45 பேருக்கு, சிறப்பு நிலை சப் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.அதற்கான உத்தரவை போலீஸ் தலைமையக எஸ்.பி., சுபம் கோஸ் வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை