உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அதிகமாக குடித்த தொழிலாளி பலி

அதிகமாக குடித்த தொழிலாளி பலி

நெட்டப்பாக்கம்,: அதிகமாக குடித்த கூலித்தொழிலாளி பரிதபமாக இறந்தார்.பன்ருட்டி அடுத்த விழாமங்கலம் வி.ஓ.சி. வீதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் 45, இவர் நேற்று முன்தினம் மாலை 3 மணியளவில், புதுச்சேரி மாநிலம் மடுகரைக்கு வந்து அங்கு அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு, மடுகரை-மொளப்பாக்கம் சாலையில் மயங்கி கீழே கிடந்தார். தகவலறிந்த மடுகரை போலீசார் லட்சுமணனை மீட்டு அரசு பொது மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலே இறந்து விட்டதாக தெரிவித்தனர். உறவினர் சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் மடுகரை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி