உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தாகூர் கல்லுாரியில் பணி நிறைவு பெற்ற துறை தலைவர்களுக்கு பாராட்டு விழா

தாகூர் கல்லுாரியில் பணி நிறைவு பெற்ற துறை தலைவர்களுக்கு பாராட்டு விழா

புதுச்சேரி: தாகூர் அரசு கலை அறிவியல் கல்லுாரி வேதியியல் துறை தலைவர் அஜந்தா பரிமளா, இயற்பியல் துறை தலைவர் நல்லுசாமி ஆகியோர் பணி ஓய்வு பெற்றனர். இவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நேற்று நடந்தது.கல்லுாரி முதல்வர் சசிகாந்த தாஸ் தலைமை தாங்கிஇருவருக்கும் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார். இதேபோல் வேதியியல் மற்றும் இயற்பியல் துறை சார்பில் இருவரும் கவுரவிக்கப்பட்டனர்.ஏற்பாடுகளை பேராசிரியர்கள் அஜய்குமார் குப்தா, சாமி, ரமேஷ், ரவிக்குமார், கனிமொழி, ரத்தனம் ஆகியோர் செய்திருந்தனர்.சிவகாம சுந்தரி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ