உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

அரியாங்குப்பம்: குடும்ப பிரச்னையில் மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கணவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.அரியாங்குப்பம், ஓடைவெளியை சேர்ந்தவர் கலைச்செல்வன், 62. இவரது மனைவி ஷாலினி, வட்டிக் கடையில் வைத்துள்ள நகைக்கு வட்டி கட்ட பணம் வேண்டும் என, கலைச்செல்வனிடம் கேட்டார். ஆத்திரமடைந்த அவர், ஷாலினியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.ஷாலினி கொடுத்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ