உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கடலுார் சிறைக் கைதி நெஞ்சு வலியால் சாவு

கடலுார் சிறைக் கைதி நெஞ்சு வலியால் சாவு

கடலுா : நெஞ்சு வலியால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கைதி சிகிச்சை பலனின்றி இறந்தார்.கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலுார் பெரியப்பட்டு காலனியை சேர்ந்தவர் செவிடன் (எ) ஆறுமுகம்,42; இவர், 2022ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் கைது செய்யயப்பட்டு, கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.இவருக்கு கடந்த 4ம் தேதி திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடன், அவர், கடலுார் அரசு மருத்துவமவையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று இறந்தார். கடலுார் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை