முதியவர் சாவு போலீசார் விசாரனை
புதுச்சேரி : வில்லியனுார் பிளாட்பாரத்தில் இறந்த முதியவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.வில்லியனுார் தென்கோபுர வீதியில் உள்ள பிளாட்பாரத்தில் 75 வயது மதிக்க தக்க முதியவர் இறந்து கிடந்தார். தகவலறிந்த போலீசார் சடலத்தை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.வில்லியனுார் போலீசார் வழக்குப்பதிந்து இறந்தவர் யார், எந்த ஊர்,இறப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.