உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கிராமப்புறங்களில் உள்விளையாட்டு அரங்கம்

கிராமப்புறங்களில் உள்விளையாட்டு அரங்கம்

புதுச்சேரி : நகர்புறம், கிராமப்புறங்களில் திறந்தவெளி விளையாட்டு திடல்கள், சிறு உள்விளையாட்டு அரங்குகள் அமைக்கப்படும் என, முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டார்.பட்ஜெட்டில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலம் குறித்து இடம் பெற்றுள்ள முதல்வரின் முக்கிய அறிவிப்புகள்:இந்திரா காந்தி விளையாட்டு வளாகத்தில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயற்கை ஹாக்கி திடல் அமைக்கப்படும். காரைக்கால் டி.ஆர். பட்டினத்தில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 1 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம் இந்தாண்டு கட்டி முடிக்கப்படும்.நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் திறந்தவெளி விளையாட்டு திடல்கள், சிறு உள்விளையாட்டு அரங்குகள் அமைக்கப்படும். பல்வேறு விளையாட்டு பிரிவுகளில் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கல், விளையாட்டு நல திட்டங்களை செயல்படுத்த இத்துறைக்கு 32.12 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ