உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு துறைமுகத்தில் ஏற்றம்

1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு துறைமுகத்தில் ஏற்றம்

புதுச்சேரி : புதுச்சேரி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது நேற்று முன்தினம் காலையில் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவியது.இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என கணிக்கப்பட்டது. அதன்படி நேற்று அதிகாலை ஆழ்ந்த காற்றுத்தழுத்த தாழ்வு பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.மேலும் இது ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகர்ந்து களிங்கப்பட்டிணம் அருகே விசாகப்பட்டிணம் - கோபால்பூர் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.அதையடுத்து நேற்று மாலை 5:00 மணியளவில் புதுச்சேரி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளதால் மீனவர்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளனர்.விழுப்புரம், செப். 1-விழுப்புரம் ரயில் நிலைய சீரமைப்பு பணிக்காக, ரயில்வே மேம்பாலம் மூடப்பட்டு, போக்குவரத்தை மாற்றி விடப்பட்டதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.விழுப்புரம் ரயில் நிலையம், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ. 23.50 கோடியில் நவீனமயமாக்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக நேற்று ரயில் நிலையத்தில் உள்ள பழைய நடைபாதை மேம்பாலத்தை அகற்றம் பணியும், உயர் மின்னழுத்த கம்பங்கள் மாற்றும் பணி நடந்தது. அதனையொட்டி விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலம் மூடப்பட்டது.காலை 11:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை மேம்பாலத்தின் இருபுறமும் ரயில்வே போலீசார் தடுப்பு கட்டை வைத்து மூடி, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இவ்வழியே வந்த இரு சங்கர வாகனங்களை ரயில் நிலையம் வழியாகவும், நான்கு சக்கர வாகனங்கள் கீழ்பெரும்பாக்கம் தரைப்பாலம் வழியாகவும் திருப்பி விடப்பட்டது. இதனால், போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.விழுப்புரம்-புதுச்சேரி-கடலுார் வழித்தட பஸ்கள் முண்டியம்பாக்கம், பனையபுரம் வழியாகவும் மற்றும் விழுப்புரம் - நாகை சாலையில் வாணியம்பாளையம் வழியாக இயக்கப்பட்டன.

இந்த சீரமைப்பு பணி நாளை 2ம் தேதி நடைபெற உள்ளதால் அன்று மதியம் 1:00 மணி முதல் 2:00 மணிவரையிலும், மாலை 4:00 மணி முதல் 5:00 வரையிலும் ரயில்வே மேம்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி