சொக்கம்பட்டு கிராமத்தில் ராகு கால சிறப்பு பூஜை
நெட்டப்பாக்கம்: சொக்கம்பட்டு ஜெயமங்கள துார்காம்பிகை கோவிலில் ராகு கால சிறப்பு பூஜை நடந்தது.நெட்டப்பாக்கம் அடுத்த சொக்கம்பட்டு - கரியமாணிக்கம் கிராமத்தில் உள்ள ஜெயமங்கள துர்காம்பிகை கோவிலில் நேற்று காலை 10:30 மணிக்கு ராகு கால சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி காலை 9:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது.தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.