உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / எஸ்.ஐ., மகள் திடீர் சாவு லாஸ்பேட்டை போலீஸ் விசாரணை

எஸ்.ஐ., மகள் திடீர் சாவு லாஸ்பேட்டை போலீஸ் விசாரணை

புதுச்சேரி, : பிறந்த நாள் விழாவிற்கு சென்று திரும்பிய சப்இன்ஸ்பெக்டரின் மகள் திடீரென உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி மடுவுபேட், மெயின்ரோடு, மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி, 59; போக்குவரத்து போலீஸ் சப்இன்ஸ்பெக்டர். இவரது மகள் சுனந்தா, 34; தட்டாஞ்சாவடி முருகா தியேட்டர் அருகில் உள்ள டேட்டா மேட்டிக்ஸ் நிறுவனத்தில் திட்ட மேலாளராக பணியாற்றி வந்தார். மகன் சசிதரன் வினோபா நகர் மெடிக்கல் கம்பெனியில் பணியாற்றினர்.நேற்று முன்தினம் மதியம் பிறந்த நாள் விழாவுக்கு சென்ற சுனந்தா, இரவு 8:30 மணிக்கு வீடு திரும்பினார். அதிகாலை 3:30 மணிக்கு நெஞ்சு வலிப்பதாக சுனந்தா கூறினார். அவரது பெற்றோர் சுனந்தாவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சிகிச்சை அளித்தனர். சில நிமிடத்தில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். காலை 5:00 மணிக்கு வீட்டில் சுனந்தா மயங்கி கிடந்தார். சுனந்தாவை அவரது பெற்றோர் மீண்டும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, வழியிலே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ