உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கதிர்வேல் கோவிலில் சூரசம்ஹார விழா

கதிர்வேல் கோவிலில் சூரசம்ஹார விழா

புதுச்சேரி: கதிர்காமம் கதிர்வேல் சுவாமி கோவிலில் சூரசம்ஹார உற்சவம் நடந்தது.கதிர்காமம் கதிர்வேல் சுவாமி கோவிலில் சூரசம்ஹார உற்சவம் கடந் 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் ஆராதனைகளும், இரவு சுவாமி வீதியுலா நடந்தது. கடந்த 3ம் தேதி தாருகா சூரசம்ஹாரம், கடந்த 4ம் தேதி அம்பாளிடமிருந்து வேல்வாங்குதல் நடந்தது.முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் ஆராதனைகளும், இரவு 8 மணிக்கு ஆட்டுகிடா வாகனத்தில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலை திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது. நாளை ( 8 ம் தேதி) சண்டிகேஸ்வரர் உற்சவம் நடக்கிறது.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ