உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தொழிலாளர் காப்பீடு அலுவலகத்தில் நாளை சிறப்பு குறைதீர் முகாம்

தொழிலாளர் காப்பீடு அலுவலகத்தில் நாளை சிறப்பு குறைதீர் முகாம்

புதுச்சேரி: தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் சார்பில், இருவார விழாவையொட்டி, நாளை சிறப்பு குறைதீர் முகாம் நடக்கிறது.புதுச்சேரி தொழிலாளர் காப்பீட்டு கழக மண்டல இயக்குனர் அலுவலக செய்திகுறிப்பு:புதுச்சேரி தொழிலாளர் அரசு காப்பீட்டு கழக மண்டல அலுவலகத்தில், நாளை 5ம் தேதி மாலை 3:30 மணி முதல் 5:00 மணி வரை, சிறப்பு குறைதீர் முகாம் நடக்கிறது. பங்குதாரர்கள், காப்பீடு நபர்கள், பயனாளிகளின் குறைகளுக்கு முகாமில் உடனடியாக தீர்வு காணப்படும்.மேலும், காப்பீடு மண்டல அலுலகத்தில், ஒவ்வொரு மாதம் 2வது புதன்கிழமை, குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதனையடுத்து, வரும் 12ம் தேதி, மாலை 3:30 மணி முதல் 4:30 மணி வரை, மண்டல அலுவலகத்தில் குறைதீர் முகாம் நடக்க உள்ளது. எனவே, தொழிலாளர்கள், தொழில் முனைவோர்கள், காப்பீடு தொடர்பான பிரச்னைகளை, கடிதம் மூலம் தெரிவிக்கலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ