உழவர்கரை நகராட்சியில் சிறப்பு வரி வசூல் முகாம்
புதுச்சேரி : உழவர்கரை நகராட்சி சார்பில் சிறப்பு வரி வசூல் முகாம் நடந்தது.உழவர்கரை நகராட்சி சார்பில், வீட்டு வரி, சொத்து வரி, சேவை வரி செலுத்துபவர்களுக்கான சிறப்பு முகாம் நேற்று நடந்தது. காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, புதுச்சேரி வெங்கட்டா நகர், தமிழ் சங்க வளாகத்தில் நடந்த முகாமில், காமராஜர் நகர், வெங்கட்டா நகர், பிருந்தாவனம், சாரம் மற்றும் இதர வார்டுகளை சேர்ந்த பலர், 2024-25ம் ஆண்டு வரையிலான வீடு மற்றும் சேவை வரி நிலுவை தொகையை செலுத்தினர்.இதேபோல், தட்டாஞ்சாவடி வி.வி.பி., நகர் வீட்டு வரி வசூல் மையத்திலும், சிறப்பு வரி வசூல் முகாம் நேற்று நடந்தது.