உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குட்கா விற்ற இருவர் கைது

குட்கா விற்ற இருவர் கைது

புதுச்சேரி : பெட்டிக்கடையில் குட்கா விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.உருளையான்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் மற்றும் போலீசார் நேற்று மாலை ரோந்து சென்றனர். கடலுார் சாலை அந்தோணியர் கோவில் பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர். அங்கு புதுச்சேரி தவீடுப்பேட் முன்சிபல் குடியிருப்பை சேர்ந்த ராஜீ, 39, லாஸ்பேட்டை பாரி நகர் பொன்னியம்மன் கோவில் தெரு ஜெயக்குமார், 45, ஆகியோரது பெட்டிக் கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கடையில் இருந்த ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை