ஹெல்த் காலனியில் 25ம் தேதி குடிநீர் கட்
புதுச்சேரி: முதலியார்பேட்டை மேல்நிலை நீர்தேக்க தொட்டி பராமரிப்பு பணியால், வரும் 25ம் தேதி குடிநீர் நிறுத்தப்படுகிறது.முதலியார்பேட்டை ஹெல்த் காலனி, மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி, வரும் 25ம் தேதி, மேற்கொள்ளப்படுகிறது. அதனால், ஹெல்த் காலனி, சுதானா நகர், பிரியதர்ஷினி நகர், மறைமலை நகர், திருமகள் நகர், திவான் கந்தப்பா நகர், ஆகிய பகுதிகளில் மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரை குடிநீர் வினியோகம் இருக்காது என, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.