உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வழுக்கி விழுந்த தொழிலாளி சாவு

வழுக்கி விழுந்த தொழிலாளி சாவு

அரியாங்குப்பம்: எலும்பு முறிவு ஏற்பட்டு வீட்டில் இருந்த தொழிலாளி பாத் ரூமில் வழுக்கி விழுந்து உயிரிழந்தார். தவளக்குப்பம், தானாம்பாளையம், புதுநகரை சேர்ந்தவர் பாபு, 61; கூலி வேலை செய்து வந்தார். கடந்த 2023ம் ஆண்டு இவர் கீழே விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மருத்துவ சிகிச்சை பெற்று வீட்டில் இருந்து வந்தார்.  நேற்று முன்தினம் பாத் ரூமிற்கு சென்றார். அங்கு வழுக்கி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.  உனடியாக அவரை புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர் பரிசோதித்து அவர், இறந்ததை உறுதி செய்தனர். தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை