உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வேன் மோதி வாலிபர் பலி; உறவினர்கள் போராட்டம்

வேன் மோதி வாலிபர் பலி; உறவினர்கள் போராட்டம்

காரைக்கால் : காரைக்கால், திருப்பட்டினம் முதலிமேடு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் மகன் அஜித் குமார், 23. இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு பைக்கில் திருப்பட்டினம் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார்.எடத்தெரு சந்திப்பில் வந்தபோது எதிரே மீன் ஏற்றி வந்த வேன், பைக் மீது மோதியது. படுகாயமடைந்த அஜித்குமாரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்தனர். வெகு நேரமாகியும் ஆம்புலன்ஸ் வராததால், வேறு வாகனம்மூலம் அவரை அரசு மருந்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை பலனின்றி அஜித்குமார் உயிரிழந்தார்.ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் அவசர சிகிச்சை பிரிவில் உள்ள கண்டாடியை உடைந்தனர். தொடர்ந்து, 12:00 மணியளவில் மருத்துவமனை எதிரில் உள்ள காமராஜர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த தொகுதி எம்.எல்.ஏ., நாகதியாகராஜன், சீனியர் எஸ்.பி., மனீஷ் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து பேச்சு வாத்தை நடத்தி, சமாதானம் செய்தனர். அதையடுத்த போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், காமராஜர் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.விபத்து தொடர்பாக மீன் லாரி டிரைவர் நாகப்பட்டினம், வெளிபாளையத்தை சேர்ந்த பரமசிவம், 31, என்பவர் மீது, திருப்பட்டினம் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை