உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பவுர்ணமியை முன்னிட்டு 108 பால்குட அபிஷேகம்

பவுர்ணமியை முன்னிட்டு 108 பால்குட அபிஷேகம்

திருக்கனுார்: செட்டிப்பட்டு காளியம்மன் கோவிலில், பவுர்ணமியை முன்னிட்டு பால்குட அபிஷேகம் இன்று நடக்கிறது.திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் மகா காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 16ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா மற்றும் பால்குட அபிேஷகம் இன்று (12ம் தேதி) நடக்கிறது.இதையொட்டி, அன்று காலை 6:00 மணிக்கு சங்கராபரணி ஆற்றங்கரைக்கு சென்று, சக்தி கரகத்துடன் 108 பால்குடத்தை ஊர்வலமாக எடுத்து வந்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.காலை 11:00 மணிக்கு சந்தன காப்பு அலங்காரமும் மற்றும் மதியம் 1:00 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது. மாலை 4:00 மணிக்கு ஊரணி பொங்கல் வைத்து, மாலை 5:00 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது.ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !