உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / லாரி மீது தனியார் பஸ் மோதல் காரைக்காலில் 15 பேர் காயம்

லாரி மீது தனியார் பஸ் மோதல் காரைக்காலில் 15 பேர் காயம்

காரைக்கால்: காரைக்கால் பி.கே., சாலையோரத்தில் நேற்று மாலை லாரி ஒன்று நின்றிருந்தது. அவ்வழியாக நாகூரிலிருந்து வந்த தனியார் பஸ் லாரி மீது மோதியது. இதில் பஸ், லாரியின் முன் பக்கங்கள் சேதம் அடைந்தன. பஸ்சில் வந்த பயணிகள் 15 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்த பயணிகளை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின், போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் அப்பகுதியில் மாலை 4:00 முதல் 4:30 மணி வரை போக்குவரத்து பாதித்தது. விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை