உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தீபாவளி பண்டிகைக்கு 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ அரிசி

தீபாவளி பண்டிகைக்கு 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ அரிசி

முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு புதுச்சேரி: புதுச்சேரியில் தீபாவளிக்கு முன் ரேஷன் கடைகள் திறந்து, அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.அவர் கூறியதாவது; புதுச்சேரி மக்கள் அனைவரும் எதிர்பார்க்க கூடிய ரேஷன் கடைகள் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. தீபாவளி பண்டிக்கைக்கு முன், அனைத்து ரேஷன் கடைகளும் திறக்கப்படும். தீபாவளியை முன்னிட்டு, அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் தலா 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும்.ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஒரு மாத சம்பளம் வழங்கப்படும். பிறகு மீத சம்பளம் கொடுக்க ஏற்பாடு செய்யப்படும். முதற் கட்டமாக ரூ. 1.45 கோடி ரேஷன் கடை ஊழியர்கள் சம்பளத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைக்கான வாடகை இடங்கள், உடைந்து சேதமடைந்த மேசை, நாற்காலிகள் சரிசெய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அரிசி மற்றும் சர்க்கரைக்கான டெண்டர் வைத்து வழங்கப்படும். ரேஷன் பொருட்களை வீடு தேடி சென்று வழங்க அரசு ஆலோசித்து வருகிறது. மாநில அந்தஸ்து தீர்மானம் மத்திய அரசுக்க அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக பிரதமர் சந்திக்க திட்டமிட்டுள்ளோம்' என்றார்.

விஜய்க்கு வாழ்த்து

நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கியதிற்கும், அவரது மாநாட்டிற்கு வாழ்த்துக்கள். மேலும் மேலும் அவர் உயர்வதற்கு எனது வாழ்த்துகள். மாநாட்டிற்கு எனக்கு அழைப்புவரவில்லை. வந்தால் அது குறித்து பேசலாம் என முதல்வர் ரங்கசாமி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ