உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கத்தியுடன் திரிந்த 2 வாலிபர்கள் கைது

கத்தியுடன் திரிந்த 2 வாலிபர்கள் கைது

புதுச்சேரி : ரெட்டியார்பாளையத்தில் கத்தி, இரும்பு ராடு வைத்துக் கொண்டு திரிந்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.ரெட்டியார்பாளையம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் நேற்று மாலை அஜீஸ் நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்ற 2 வாலிபர்களை பிடித்து சோதனை செய்ததில், கத்தி, இரும்பு கம்பிகள் இருந்தது தெரியவந்தது.விசாரணையில், அவர்கள், குண்டு சாலையை சேர்ந்த அன்பரசன், 19; திருபுவனைபாளையம் ரியாஸ் அகமது, 19; என்பது தெரிய வந்தது. அதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து கத்தி, இரும்பு கம்பியை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ