மேலும் செய்திகள்
ஸ்ரீராகவேந்திரர் 354வது ஆராதனை விழா
11-Aug-2025
புதுச்சேரி : குரும்பாபேட் ராகவேந்திரா சுவாமி கோவிலில் 354வது ஆராதனை விழா நேற்று துவங்கியது. புதுச்சேரி, குரும்பாபேட் ராகவேந்திரா நகரில் அமைந்துள்ள ராகவேந்திர சுவாமிகளின் 354வது ஆராதனை விழா நேற்று(10ம் தேதி) துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது. விழாவை முன்னிட்டு, ராகவேந்திரா சுவாமிக்கு, காலை 5:00 மணிக்கு நிர்மால்ய விஸர்ஜனம், காலை 8:30 மணிக்கு மகா சிறப்பு அபிஷேகம், 11:00 மணிக்கு கனகாபிஷேகம் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து, பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு 8:30 மணிக்கு பல மந்த்ராட்க்ஷாதை நடந்தது. தொடர்ந்து, இன்று (11ம் தேதி) மற்றும் நாளை (12ம் தேதி) ராகவேந்திர சுவாமிக்கு ஆராதனை விழா நடக்கிறது. ஏற்பாடுகளை புதுச்சேரி ராகவேந்திரா சுவாமி மட் மந்த்ராலயா கிளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
11-Aug-2025