உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மரத்திலிருந்து விழுந்தவர் சாவு

 மரத்திலிருந்து விழுந்தவர் சாவு

காரைக்கால்: காரைக்காலில் மரத்திலிருந்து விழுந்த நபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காரைக்கால், மீராபள்ளி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம், 54; எலக்ட்ரீஷின். இவர், கடந்த 8ம் தேதி கடற்கரையில் புதுச்சேரி விடுதலை நாளை முன்னிட்டு அலங்கார விளங்குகள் அமைப்பதற்காக மரத்தின் மேல் ஏறியபோது நிலைத்தடுமாறி விழுந்து படு காயமடைந்தனர். கோயம்புத்துார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி