பாலா திரிபுரசுந்தரி அம்மன் கோவிலில் ஆடிப்பூரம் விழா
புதுச்சேரி: இரும்பை, பாலா திரிபுரசுந்தரி அம்மன் கோவிலில், ஆடிப்பூரத்தை முன்னிட்டு சந்தன காப்பு பெருவிழா இன்று நடக்கிறது. புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலை, இரும்பை டோல்கேட் அருகே பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆடிப் பூரத்தை முன்னிட்டு சந்தன காப்பு பெருவிழா இன்று (28ம் தேதி) நடக்கிறது. இதையொட்டி, காலை 10:00 மணிக்கு பாலா திரிபுரசுந்தரி அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் நடக்கிறது. மாலை 6:30 மணிக்கு சந்தன காப்பு அலங்காரம், தீபாராதனையும், தொடர்ந்து, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேர் உள்புறப்பாடு நடக்கிறது. பின், வளையல் பிரசாதம் வழங்கப்படுகிறது. இக்கோவிலில், ஆடிப்பூரத்தன்று மட்டுமே அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. ஏற்பாடுகளை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் டிரஸ்ட் செய்து வருகிறது.