7 எஸ்.பி.,களுக்கு கூடுதல் பொறுப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் பணியாற்றும் 7 எஸ்.பி.,களுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டன. அதன்படி, எஸ்.பி.,க்கள் ஈஷா சிங்- கமாண்டன்ட் (ஐ.ஆர்.பி.என்), சுருதி- போதை பொருள் தடுப்பு, சைபர் கிரைம், ரட்சினா சிங்- வயர்லெஸ், ஜிந்தா கோதண்டராமன்- சிக்மா செக்யூரிட்டி, மோகன்குமார்- மோட்டார் போக்குவரத்து, சரவணன்- பி.சி.ஆர். செல், பழனிவேல்- தீவிரவாத தடுப்பு உள்ளிட்ட கூடுதல் பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை போலீஸ் தலைமையக எஸ்.பி., சுபம் கோஷ் பிறப்பித்துள்ளார்.