உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெண் மீது தாக்குதல்

பெண் மீது தாக்குதல்

அரியாங்குப்பம் : பொங்கல் கரும்பு வழங்குவதில் ஏற்பட்ட வாய்தகராறில் பெண்ணை தாக்கியவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.நைனார்மண்டபம் கலைமகள் வீதியை சேர்ந்தவர் மோகன் மனைவி சுதா, 40; இவர் வீட்டு வாசலில் தனது குழந்தைகளுடன் நின்று கொண்டிருந்தார். நகர் சார்பில் பொதுமக்களுக்கு பொங்கல் கரும்பு நேற்று முன்தினம் வழங்கப்பட்டது. அதில், சிலர் நீங்கள் அரியாங்குப்பம் தொகுதியை சேர்ந்தவர்கள் என கூறி கரும்பை சுதாவிற்கு வழங்கவில்லை. இதில், இவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதில், ஆத்திரமடைந்த கரும்பு வழங்கிய நபர்கள் சிலர் சுதாவை தாக்கினர்.புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, சுதாவை தாக்கிய நபர்களை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ