பைக் திருட்டு
அரியாங்குப்பம் : கடை முன் நிறுத்தி வைத்திருந்த பைக்கை திருடிச் சென்ற நபரை போலீ சார் தேடிவருகின்றனர்.கடலுார், வண்டிப்பாளையத்தை சேர்ந்தவர் சஞ்சீவி, 25; இவர், அபி ேஷகப்பாக்கத்தில் உள்ள சவுண்ட் சர்வீஸ் கடையில், எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது பைக்கை, கடை முன் நிறுத்திவிட்டு, கடையிலேயே துாங்கியுள்ளார். நேற்று காலை எழுந்து பார்த்தபோது பைக் காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம ஆசாமியை தேடிவருகின்றனர்.