உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போதை நபரை தாக்கியவர் மீது வழக்கு பதிவு

போதை நபரை தாக்கியவர் மீது வழக்கு பதிவு

புதுச்சேரி: நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் இளங்கோ, 50. இவர் நேற்று முன்தினம் மறைமலை அடிகள் சாலையில் அதிக மதுபோதையில் படுத்து கிடந்தார்.அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர், இளங்கோவின் சட்டை பாக்கெட்டில் கை வைத்து திருட முயன்றார். திடீரென கண்விழித்த இளங்கோ பாக்கெட்டில் கை வைத்தது குறித்து கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அந்த நபர், அருகிலிருந்த சென்ட்ரிங் பலகையை எடுத்து இளங்கோவின் தலையில் தாக்கிவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். படுகாயமடைந்த இளங்கோ அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, அவரை தாக்கிய நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி