உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குடியரசு தின விழாவில் பங்கேற்கும் பிரதிநிதிகளுக்கு முதல்வர் வாழ்த்து

குடியரசு தின விழாவில் பங்கேற்கும் பிரதிநிதிகளுக்கு முதல்வர் வாழ்த்து

புதுச்சேரி : குடியரசு தின விழாவில் பங்கேற்கும் இரண்டு பிரதிநிதிகளுக்கு முதல்வர் ரங்கசாமி, விமானப் பயண சீட்டு வழங்கி வழியனுப்பி வைத்தார்.ஒவ்வொரு ஆண்டும் புதுடில்லியில் நடக்கும் குடியரசு தின நிகழ்ச்சியில் பங்கேற்க ஒவ்வொரு மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியினர்களில் இரண்டு நபர்கள் பரிந்துரைக்கப்படுவர்.அதன்படி, புதுச்சேரி அரசு சார்பில், முதல்வர் ரங்கசாமி பரிந்துரையின் பேரில் பாகூர் குடியிருப்புப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சரண்யா, சசிகுமார் ஆகிய பிரதிநிதிகள் குடியரசு தின விழாவில் கலந்துகொள்ள உள்ளனர். இவர்கள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களுக்கு தேவையான குளிர்கால உடைக்கான தொகை மற்றும் விமானப் பயண சீட்டு ஆகியவற்றை முதல்வர் ரங்கசாமி வழங்கி, வழியனுப்பி வைத்தார்.நிகழ்ச்சியில், சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், அரசு கொறடா ஆறுமுகம், ரமேஷ் எம்.எல்.ஏ., ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் கேசவன், இயக்குனர் இளங்கோவன், இரண்டு பிரதிநிதிகளையும் டில்லி அழைத்துச் சென்று வருவதற்காக தொடர்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள துறையின் நல அதிகாரி பழனி ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ