மேலும் செய்திகள்
தென் மாநில முதல்வர்கள் மாநாடு: அமித் ஷா மகிழ்ச்சி!
1 hour(s) ago | 1
ஒடிஷா அருகே வங்கக்கடலில் மூழ்கிய பனாமா சரக்கு கப்பல்
3 hour(s) ago
சென்னை, செங்கல்பட்டு உட்பட 10 மாவட்டங்களில் இன்று மழை
4 hour(s) ago
புதுச்சேரி: மறைந்த தலைவர்களுக்கு, புதுச்சேரி சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.புதுச்சேரி சட்டசபை நேற்று காலை கூடியதும், புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கண்ணன் மறைவு குறித்த இரங்கல் தீர்மானத்தை முதல்வர் ரங்கசாமி முன்மொழிந்தார். இந்த தீர்மானத்தின் மீது எம்.எல்.ஏ.,க்கள் பேசினர்.தொடர்ந்து, மறைந்த வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன், மேல்மருவத்துார் சித்தர் பீடம் பங்காரு அடிகளார், கம்யூ., தலைவர் சங்கரய்யா, தமிழக முன்னாள் கவர்னர் பாத்திமா பீவி, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் குறிப்புகளை சபாநாயகர் செல்வம் வாசித்தார்.தொடர்ந்து, சபையில் அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.
1 hour(s) ago | 1
3 hour(s) ago
4 hour(s) ago