மேலும் செய்திகள்
முத்தியால்பேட்டையில் தீப்பந்த ஊர்வலம்
19-Aug-2025
அரியாங்குப்பம் : புதுச்சேரியில், ஓட்டு திருட்டை கண்டித்து, முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். புதுச்சேரியில், ஓட்டு திருட்டை கண்டித்து, காங்., சார்பில், நேற்று ஊர்வலம் நடந்தது. அரியாங்குப்பத்தில் புறப்பட்ட ஊர்வலத்தை முன்னாள் முதல்வர் நாராயணசாமி துவக்கி வைத்தார். அகில இந்திய காங்., செயலாளர் சூரத் ஷெக்டே, முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., இளைஞர் காங்., தலைவர் ஆனந்தபாபு, மாநில பொதுச்செயலாளர் தனுசு, முன்னாள் காங்., தலைவர் இளையராஜா, வழக்கறிஞர் அணி தலைவர் மருதுபாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர் விஜயலட்சுமி, வட்டார காங்., தலைவர் ஐயப்பன், முன்னாள் கவுன்சிலர் குமரன், முத்தியால்பேட்டை தொகுதி செயலாளர் ராஜேந்திரன், நிர்வாகிகள் உட்பட ஆயிரணக்கான காங்., தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலம் அரியாங்குப்பத்தில் இருந்து முருங்கப்பாக்கம், முதலியார்பேட்டை வழியாக சென்று, கடலுார் சாலை வெங்கடசுப்பாரெட்டியார் சிலை அருகில், இரவு 7:30 மணியளவில் நிறைவடைந்தது. இதனால், அரியாங்குப்பம் முதல் முதலியார்பேட்டை வரை, போக்குவரத்து பாதித்தது.
ஊர்வலத்தில், காரில் உட்கார்ந்து சென்ற, காங்., மாநில மகளிரணி தலைவி நிஷாவுக்கு, திடீரென மயக்கம் ஏற்பட்டது. அவரை கட்சி தொண்டர்கள், ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.
19-Aug-2025