உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தொழிலாளிக்கு கொலை மிரட்டல்

தொழிலாளிக்கு கொலை மிரட்டல்

அரியாங்குப்பம் : டைல்ஸ் வேலை செய்யும் தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இரண்டு வாலிபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.அரியாங்குப்பம், ஓடைவெளி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் இளங்கோவன், 27; இவர் டைல்ஸ் அமைக்கும் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன் தினம் வீராம்பட்டிணம் விளையாட்டு திடலில் தனது நண்பருடன் நின்று கொண்டிருந்தார். அங்கு மது குடித்து கொண்டிருந்த ஓடைவெளியை சேர்ந்த சதிஷ், பிரபு ஆகிய இருவரும் இளங்கோவனிடம் , நீ பெரிய ஆளா என தகராறு செய்து, அவரை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, சதீஷ், பிரபு ஆகிய இருவரையும் தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி