உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மூத்த குடிமக்கள் நலவாழ்வு சங்கம் கண் பரிசோதனை முகாமிற்கு ஏற்பாடு

மூத்த குடிமக்கள் நலவாழ்வு சங்கம் கண் பரிசோதனை முகாமிற்கு ஏற்பாடு

புதுச்சேரி : மூத்த குடிமக்கள் நலவாழ்வு சங்கம் சார்பில் கண் பரிசோதனை முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எலைட்ஸ் ரோட்டரி சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் மூத்த குடிமக்கள் நலவாழ்வு சங்கம் ஆகியவை இணைந்து இலவச சர்க்கரை நோய் கண்டறிதல், சர்க்கரை நோ#க்கான விழித்திரை பரிசோதனை மற்றும் கண் அழுத்த பரிசோதனை முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளன. இந்த பரிசோதனை முகாம் வரும் 16ம் தேதி காலை 9 மணிக்கு புஸ்சி வீதியில் உள்ள அப்போலோ மருந்தக மாடியில் நடக்கிறது. முகாமில், சர்க்கரை நோய் கண்களை எவ்வாறு பாதிக்கிறது, பார்வை இழப்பு ஏற்படாமல் எவ்வாறு தடுக்கலாம், பார்வையை எப்படி பாதுகாத்துக் கொள்ளலாம் என ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.கண் அழுத்தம் நோய் உடையவர் கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களையும், கண் பரிசோதனைக்கு அழைத்து வர லாம் என மூத்த குடிமக்கள் நலவாழ்வு சங்க தலைவர் எஸ்.வி.அய்யர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை