தி.மு.க., நலத்திட்ட உதவி வழங்கல்
புதுச்சேரி : இந்திரா நகர் தொகுதி தி.மு.க., சார்பில், துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. தர்மபுரி திரவுபதி அம்மன் கோவில் திடலில் நடந்த விழாவிற்கு, தொகுதி அவைத் தலை வர் கோதண்டராமன் தலைமை தாங்கினார். இந்திரா நகர் தொகுதி பொறுப்பாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான காந்தி கலந்து கொண்டு, ஏழைகளுக்கு வேட்டி - சேலை வழங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் இளம்பரிதி ஆகியோர் நலிந்த உறுப்பினர்களுக்கு உதவித்தொகை வழங்கினர். இதில், இந்திரா நகர் தொகுதி நிர்வாகிகள் சுப்ரமணியன், பொற்செழியன், பிரபு, தேவநாதன், ஜெகன், செல்லத்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.