மாடியில் இருந்து குதித்து முதியவர் தற்கொலை
புதுச்சேரி: நோய் குணமாகாததால், மனமுடைந்த முதியவர், வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். வெங்கட்டா நகரை சேர்ந்தவர் ஹரிஷ்குமார் சோட்டாய், 62. வயிற்று பிரச்னையால், அவதிப்பட்டு வந்த இவர், அறுவை சிகிச்சை செய்து கொண்டார். மருந்துகள் எடுத்தும் நோய் குணமாகவில்லை. அதனால் மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று வலி அதிகமானதால், விரக்தியடைந்த அவர், வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, புகாரின் பேரில், பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.