உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தீக்காயமடைந்த மூதாட்டி சாவு

தீக்காயமடைந்த மூதாட்டி சாவு

திருக்கனுார்: திருக்கனுார் அடுத்த சோரப்பட்டு, பள்ளத்தெருவை சேர்ந்தவர் பஞ்சவர்ணம், 85. இவர் கடந்த 17ம் தேதி காலை காஸ் அடுப்பில் சமையல் செய்தபோது, அவரது சேலையில் தீ பிடித்து, உடல் முழுதும் பரவியது.படுகாயமடைந்த பஞ்சவர்ணத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு, ஜிப்மரில் அனுமதித்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி பஞ்சவர்ணம் நேற்று முன்தினம் இறந்தார். புகாரின் பேரில், திருக்கனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை