அகல் விளக்கில் தீப்பிடித்து மூதாட்டி பலி
புதுச்சேரி: கோவிலில் அகல்விளக்கில் தீப்பிடித்து மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.முதலியார்பேட்டை பட்டம்மாள் நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் கீதா, 85; இவர் கோயில் பூஜை செய்யும் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 14ம் தேதி அதே பகுதியில் உள்ள மாங்களியம்மன் கோவிலில் பூஜை செய்து கொண்டிருந்த போது, கோவிலில் இருந்த அகல் விளக்கில் அவரது புடவை தீப்பிடித்து எரிந்தது. உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு அவரை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கீதா நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து அவரது மகள் ஜெயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.