மேலும் செய்திகள்
இளம்பெண் மாயம்
19-Nov-2025
புதுச்சேரி: மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் செய்துள்ளார். ஏம்பலம், தாமரைகுளத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகள் யுவஸ்ரீ, 23; இவர் கடந்த 11ம் தேதி தனது தந்தையுடன் புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனைக்கு செல்ல பஸ்சில் வந்துள்ளார். புதுச்சேரி பஸ் நிலையத்திற்கு வந்த பார்த்தபோது யுவஸ்ரீயை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
19-Nov-2025