உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நவராத்திரி பெருவிழாவில் அம்மன் ரிஷப வாகனத்தில் உலா

நவராத்திரி பெருவிழாவில் அம்மன் ரிஷப வாகனத்தில் உலா

புதுச்சேரி : புதுச்சேரி தர்ம சம்ர க்ஷண சமிதி சார்பில் நடைபெற்று வரும் நவராத்திரி பூஜையில், அம்மன் நேற்று ரிஷப வாகனத்தில் வலம் வந்து அருள்பாலித்தார். புதுச்சேரி தர்ம சம்ரக்ஷண சமிதி சார்பில், லாஸ்பேட்டை, இ.சி.ஆர்., சங்கர் வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடைபெற்று வரும், சத சண்டி ேஹாமத்தில், ஐந்தாம் நாளான நேற்று, சண்டி மாதா காமாட்சி யாக ரிஷப வாகனத்தில் வலம் வந்து யாக குண்டம் அருகில் எழுந்தருளினார். வேத நாதத்துடன் துவங்கிய பூஜையில் கோ பூஜை, அஸ்வ பூஜை, நவாவரண பூஜை, அபிஷேக, தீபாராதனை என நீடித்து வழக்கமாக நடைபெறும் ஹோம திரவ்ய சமர்ப்பணம், வஸ்திரம், திருமாங்கல்யம் அர்ப்பணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாலை நடந்த இசை நிகழ்ச்சியில், சந்தோஷ் பாட்டுக்கு சத்திய மூர்த்தி வயலின், வீரமணி மிருதங்கம் வாசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி