உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  அரசு ஊழியர் தற்கொலை

 அரசு ஊழியர் தற்கொலை

புதுச்சேரி: குரும்பாபேட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர் துக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். குரும்பாபட், ஹவுசிங் போர்டை சேர்ந்தவர் லோகநாதன், 55; இ.எஸ்.ஐ., அலுவலகத்தில் உதவியாளர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக சற்று மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை இவரது மனைவி அனித்தாலட்சுமி கடைக்கு சென்றுவிட்டு, 11:00 மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் அறையில் லோகநாதன் துாக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கதிர்காமம் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், அவர் இறந்ததை உறுதி செய்துள்ளார். புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ