உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கணவர் மாயம்: மனைவி புகார்

கணவர் மாயம்: மனைவி புகார்

புதுச்சேரி : வேலைக்கு சென்ற கணவரை காணவில்லை என மனைவி போலீசில் புகார் செய்தார். லாஸ்பேட்டை, குறிஞ்சி நகரை சேர்ந்தவர் பாலாஜி, 34; சாரத்தில் உள்ள தனியார் வங்கியில் வேலை செய்து வருகிறார். வாய் பேச முடியாத மகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்வது தொடர்பாக, கணவன் மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டது. கடந்த 21ம் தேதி வேலைக்கு சென்றவர், மாலை வரை வீட்டுக்கு வரவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து, அவரது மனைவி ஆனந்தி கொடுத்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !