இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை கொடுமைகள் நினைவு தினம்
புதுச்சேரி: புதுச்சேரி அரசு சார்பில், இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை கொடுமைகள் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. கலை பண்பாட்டுத் துறை சார்பில், நகராட்சி கட்டடத்தில் நடந்த நிகழ்ச்சியில், கவர்னர் கைலாஷ்நாதன் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். தற்காலிக சபாநாயகர் அன்பழகன், அமைச்சர் நமச்சிவாயம், விக்னேஷ்கண்ணன் எம்.எல்.ஏ., கலை பண்பாட்டுத் துறை செயலர் முகமது அசன் அபித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.