உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இந்திரா நினைவு நாள் அமைச்சர் மரியாதை

இந்திரா நினைவு நாள் அமைச்சர் மரியாதை

காரைக்கால்: காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.இதையொட்டி இந்திரா உருவப்படத்திற்கு அமைச்சர் திருமுருகன் தலைமையில் மலர் துாவி மரியாதை செலுத்தினர். துணை ஆட்சியர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். சர்வமத பிரார்த்தனைகள் இசைக்கப்பட்டு தேச பக்தி பாடல்கள் பாடப்பட்டது. இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் எஸ்.பி.,சுப்ரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி