கொலை மிரட்டல் குறித்து விசாரணை
புதுச்சேரி: பெண்னை ஆபாசமா பேசிய கொலை மிரட்டல் விடுத்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.லாஸ்பேட்டை திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்த், மனைவி சுசிலா,45; இவர் லாஸ்பேட்டையில், இண்டர்நெட் கடை நடத்தி வருகிறார். இவருக்கும் தாகூர் நகரை சேர்ந்த பத்மநாபன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்று அவர் கடை திறக்க வந்த போது, அவரை அவதுாறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து, அவர் கொடுத்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, பத்மநாபனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.