மேலும் செய்திகள்
தார்சாலை பணி துவக்கம்
22-Aug-2025
நெட்டப்பாக்கம்:பனையடிக்குப்பம் ஏரியில் பாதுகாப்பு சுவர் கட்டும் பணியினை துணை சபாநாயகர் ராஜவேலு துவக்கி வைத்தார். நெட்டப்பாக்கம் தொகுதி, பனையடிக்குப்பம் கிராமத்தில், பொதுப்பணித்துறை நீர்பாசன கோட்டம் மூலம் ரூ. 78 லட்சம் செலவில், பெரிய ஏரியின் கிழக்கு கரையில் உள்ள 850 மீட்டர் நீளமுள்ள வெளிப்புறம் பாதுகாப்பு சுவர் கட்டப்பட உள்ளது. இதற்கான பணியினை துணை சபாநாயகர் ராஜவேலு பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் நீர் பாசனம் உட்கோட்டம் மதிவாணன், இளநிலை பொறியாளர் ஜெயராமணன் உட்பட பலர் உடனிருந்தனர்.
22-Aug-2025