மேலும் செய்திகள்
போக்சோவில் வாலிபர் கைது
22-Nov-2024
மகிழ்ச்சிக்கு மூன்று மந்திரம்
19-Nov-2024
புதுச்சேரி : புதுச்சேரி, ரெட்டியார்பாளையம் சர நாராயணா நகர், 2 வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன், 74. அவர் தனது சைக்கிளில் நேற்று நெல்லித்தோப்பிற்கு சென்று கொண்டிருந்தார்.இந்திரா சிக்னல் அருகில், இடப்புறமாக செல்லும் போது, அவருக்கு பின்னால் வந்த லாரி அவரது சைக்கிள் மீது மோதியது. இதில் ராமச்சந்திரன் கீழே விழுந்தார். அப்போது லாரியின் டிரைவர் விழுப்புரத்தை சேர்ந்த சுபாஷ், என்பவர், அவரை தாக்கி கீழே பிடித்து தள்ளினார். இதில் ராமச்சந்திரன் தலையில் அடிபட்டது. இதைத்தொடர்ந்து சுபாஷ் அங்கிருந்து லாரியை ஓட்டி சென்று விட்டார். இந்த புகாரில், ரெட்டியார்பாளை யம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சுபாைஷ தேடி வருகின்றனர்.
22-Nov-2024
19-Nov-2024