உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாலா திரிபுரசுந்தரி கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம்

பாலா திரிபுரசுந்தரி கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம்

புதுச்சேரி : இரும்பை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.புதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை, மொரட்டாண்டி அடுத்த இரும்பை குபேரன் நகரில் பாலா திரிபுர சுந்தரி அம்பாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து, புதுப்பிக்கப்பட்டது. கோவிலில் ஸ்ரீராஜமாதங்கி, ஸ்ரீ வாராஹி விக்ரகங்கள் நிர்மாணிக்கப்பட்டது. திருப்பணிகள் முடிந்த நிலையில் நாளை (7ம் தேதி) காலை மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.இதற்கான பூர்வாங்க பூஜை, கடந்த 31ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது. 4ம் தேதி யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று காலை விசேஷ சந்தி விக்னேஸ்வர பூஜை, அங்குர பூஜை, மண்டப பூஜை, வேதிகார்ச்னை, பாவனாபிஷேகம், இரண்டாம் கால யாக பூஜை, திரவியாஹூதி, பூர்ணாஹூதி நடந்தது. மாலை அங்குர பூஜை, மூன்றாம் கால யாக பூஜை, பூர்ணாஹூதி மற்றும் தீபாராதனை நடந்தது.இன்று காலை விக்னேஸ்வர பூஜை, அங்குர பூஜை, நான்காம் கால யாக பூஜை, திரவ்யாஹூதி, பிரம்மச்சாரி பூஜை, கன்யா பூஜை, விமான கலசங்கள் பிரதிஷ்டை, மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி அம்பாளுக்கு ரஜத பந்தனம் சாற்றப்படுகிறது.மாலை 5:00 மணிக்கு ஐந்தாம் கால யாக பூஜையை தொடர்ந்து சுமங்கலி பூஜை, வடுக பூஜை, திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி மற்றும் தீபாராதனை நடக்கிறது.நாளை (7ம் தேதி) காலை 5:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, அங்குர பூஜை, 6ம் கால யாக பூஜை, மகா பூர்ணாஹூதி, யாத்ரா தானம், யாத்ரா ஹோமத்தை தொடர்ந்து கலசம் புறப்பாடாகிறது.காலை 9:20 மணிக்கு ராஜகோபுரம் மற்றும் பரிவார சுவாமிகள் சன்னதி விமானங்களுக்கும், 9:40 மணிக்கு பாலா திரிபுர சுந்தரி அம்பாளுக்கும், 9:50 மணிக்கு ஸ்ரீராஜ மாதங்கி அம்பாளுக்கும், 10:00மணிக்கு ஸ்ரீ வாராஹி அம்பாளுக்கும், 10:05 மணிக்கு பால பைரவருக்கும் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.மாலை 5:00 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு அலங்காரம், உபசாரத்தை தொடர்ந்து கன்யா பூஜை, தருணி பூஜை, சுவாஷினி பூஜை, வடுக பூஜை, தீபாராதனை மற்றும் உற்சவ மூர்த்திகள் உள்புறப்பாடு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை