மேலும் செய்திகள்
பாஜ கூட்டணிக்கான காரணம்: முதல்வருக்கு இபிஎஸ் பதில்
25 minutes ago
வாட்ஸ் அப்பில் இல்லாத அம்சம் அரட்டை செயலியில்: பயனர்கள் வரவேற்பு
2 hour(s) ago | 4
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
4 hour(s) ago | 3
புதுச்சேரி:புதுச்சேரியில்எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு மாணவர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.புதுச்சேரி கடற்கரை அம்பேத்கர் மணிமண்டபம் எதிரே நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு, வாலிபர் உடல் கரை ஒதுங்கியது. தகவலறிந்த பெரியகடை போலீசார் சென்று, வாலிபர் உடலை மீட்டு விசாரித்தனர். கடலுார் மஞ்சக்குப்பம், ஆல்பேட்டை காமராஜர் நகரைச் சேர்ந்த கவுதமன் மகன் நிதிஷ், 23; என்பதும், பிள்ளையார்குப்பம் மகாத்மா காந்தி மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு படித்த நிதிஷ் என்பது தெரிந்தது. பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அவருக்கு நேற்று முன் தினம், தேர்வு நடந்தது. அதற்காக வழக்கம்போல் காலை 7:45 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். அவரது கல்லுாரி பை, அம்பேத்கர் மணிமண்டபம் அருகே உள்ள உணவகத்தில் கிடந்தது. தேர்வு பயத்தில் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.
25 minutes ago
2 hour(s) ago | 4
4 hour(s) ago | 3