உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரவிந்தர் ஆசிரமம் வந்த ஒடிசா சிறுமி திடீர் சாவு

அரவிந்தர் ஆசிரமம் வந்த ஒடிசா சிறுமி திடீர் சாவு

புதுச்சேரி : அரவிந்தர் ஆசிரமம் வந்த ஒடிசா மாநில மாற்றுத்திறனாளி சிறுமி உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். ஒடிசா, மகாஜன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வர். இவர் தனது குடும்பத்துடன் கடந்த 25ம் தேதி புதுச்சேரி வந்தார். அரவிந்தர் ஆசிரமம் விருந்தினர் அறையில் தங்கினர். நேற்று காலை 7:00 மணிக்கு வெங்கடேஸ்வர் மகள் மாற்றுத்திறனாளி சோனாக் ஷி லெங்கா, 15; லேசான உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்தது. உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். பெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சோனாக் ஷி லெங்கா உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி