உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மூதாட்டி மாயம் : போலீஸ் விசாரணை

மூதாட்டி மாயம் : போலீஸ் விசாரணை

அரியாங்குப்பம் : உறவினர் வீட்டுக்கு சென்ற மூதாட்டி மாயமானது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். அரியாங்குப்பம் அருகே உள்ள நோணாங்குப்பம் ஆற்றங்கரை வீதியை சேர்ந்தவர் ரத்தினாம்பாள், 68; இவர், கடந்த 4ம் தேதி, சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறி விட்டு, வீட்டில் இருந்து சென்றார். பல நாட்கள் ஆகியும் அவர் வரததால், சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் ் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை